Tuesday, October 15, 2013

பருக்களை நீங்க உதவும் பழங்கள்செர்ரி: செர்ரிப் பழத்தை அரைத்து, அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டு 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் 2 முறை செய்து வந்தால் பருக்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

தக்காளி : தினமும் தக்காளியை அரைத்து அதனை முகத்திற்கு தடவி 20 நிமிடம் மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், பருக்கள் படிப்படியாக மறைந்துவிடும்.

சிவப்பு திராட்சை: சிவப்பு திராட்சையை தயிர் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி ஊற வைத்து 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் 3 முறை செய்து வந்தால் முகப்பருக்களை எளிதில் மறையச் செய்யலாம்.

ஆரஞ்சு : சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழமும் சருமத்தின் அழகை அதிகரிப்பதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதற்கு ஆரஞ்சு பழத்தைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்யலாம் அல்லது ஆரஞ்சு பழத் தோலை பொடி செய்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம்.

0 comments:

Post a Comment

Blog Archive

TAMIL ‘Entertainment

http://cnntamil.blogspot.com/

Blogroll

Blog Archive

facebook

உங்களோடு நான்

Followers

Featured Posts

Popular Posts

Recent Posts