Thursday, August 1, 2013


migraine-11-a
காலையில் எழுந்தவுடனே நமக்கு ஒரு சுறுசுறுப்பு இருந்தாதான் அன்றைய வேலைகள் எல்லாம் சிறப்பா முடியும். அப்படி இல்லாமால் ஒரு அயர்ச்சியுடன் எழுந்திருக்கணுமான்னு நினைச்சோம்னா அன்றைக்கு முழுக்கவே மந்தமா தான் இருக்கும். பொதுவா சிலர்கிட்ட ஏன் டல்லா இருக்கன்னு கேட்டா ஒரே தலைவலின்னு சொல்வாங்க.

ஆன காலம் மாறிட்டு வருது அதனால இப்பல்லாம் தலைவலின்னு சொல்லமாட்டாங்க. ஒற்றைத் தலைவலின்னுதான் சொல்வாங்க. ஏன் அப்படி?
பொதுவா டாக்டர்கள் சொல்வது தீய பழக்கங்கள் இல்லாமல் இருந்தாலே 90 சதவீதம் நோய்கள் வராது. அதோட 6 மணி நேர தூக்கம் மற்றும் வேளைக்கு உணவு மற்றும் மனசு விட்டு பேசுதல், கொஞ்சம் உடற்பயிற்சி செஞ்சாலே பல வியாதிகளை தவிர்க்கலாம்னு தீர்வு சொல்றாங்க.
சரி இந்த ஒற்றைத் தலைவலிக்கு தீர்வு என்ன என்று பார்ப்போம்.
ஒற்றைத் தலைவலி (Migraine) : 
உலகில் 70 சதவீதம் பெண்கள் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். முறையான வழிகாட்டுதல்களும் சிகிச்சைகளும் இல்லாததால், அல்லது இருந்தும் எடுத்துக் கொள்ளாததால் பலர் தலைவலியை முற்றவிட்டு, பக்கவாதம் உட்பட வேறு சில ஆபத்தான நோய்களுக்கும் ஆட்படுகிறார்கள். சிலருக்குக் கண்பார்வை கூட மங்கிப் போகும் வாய்ப்பு இதனால்தான் உருவாகிறது.
அறிகுறிகள்: 
ஒற்றை தலைவலி என்று சொல்லப்படும் மைக்ரேன் ஒரே பக்கமாக வலிக்கக் கூடிய தலைவலி என்றாலும், தலை முழுவதும் வலி தெரியும். தலையின் மேல் பகுதியிலோ, பக்கவாட்டிலோ துடிப்பது போலவும் அடித்துக் கொள்வது மாதிரியும் லேசாக வலி ஆரம்பிக்கும்.
படிக்கட்டில் ஏறும்போது, வீட்டு வேலைகளைச் செய்யும் போது வலி கூடும். ஒலியைக் கேட்கவோ, ஒளியைப் பார்க்கவோ கூச்சமாக இருக்கும். கூடவே குமட்டலும் வாந்தியும் வரும்.
1. கிளாசிக் மைக்ரேன்: (Classic Migraine)
தலைவலியின்போது நரம்பு தொடர்பான அறிகுறிகள் தென்படுவதை (avra) இது குறிக்கும். அதாவது தலைவலி வருவதற்கான அறிகுறிகள் இல்லாமல், நோய் வருவது போன்ற உணர்வு மட்டும் எழுவது.
தலையில் நெற்றிப்பொட்டில், பொட்டெலும்பு, பின்பக்கத் தலை போன்ற இடங்களில் இதன் வலி தெரியும். கண்களிலும், தாடையிலும், முதுகிலும்கூட வலி தெரியலாம். பேச்சு குழறுதல், கவனமின்மை, மனநோய் போன்றவை இதனால் வர வாய்ப்புண்டு. தற்காலிகமாக பார்வையில் கோளாறு, உணர்வில் கோளாறு, கண்களுக்குள் மின்னல் போன்ற ஒளிக்கீற்று வந்து மறைதல் போன்றவை ஏற்படும்.
நெற்றிப் பொட்டிலும், கண்ணிலும் வலி ஏற்பட்டு, வலி அதிகரிப்பதால் சிலர் தாங்க முடியாமல் தவிப்பார்கள். சிலர் எதிலாவது தலையை முட்டிக்கொண்டு அழுவது கூட உண்டு.
கை, கால்களைப் பலவீனப்படுத்தும் இந்த வலி இரண்டு நாட்களுக்கு ஒருமுறைகூட வரலாம்.
2. பொதுவான மைக்ரேன்: (Common migraine)
மனநிலையில் பாதிப்பு, அடிக்கடி மூடு மாறுதல், சோர்வுறுதல், மனப்பதட்டம் ஆகியவற்றால் இத்தலைவலி ஏற்படும். இது தொடர்ந்து மூன்று நான்கு நாட்களுக்கு இருந்தால் குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, சிறுநீர் அதிகரித்தல் ஆகியன உண்டாகும்.
ஒற்றைத் தலைவலி எதனால் வருகிறது?
migraine-headaches
மூளை இயங்குவதற்குத் தேவைப்படும் செரடோனின் என்ற வேதியியல் திரவத்தின் அளவு குறையும் போதுதான் இந்த ஒற்றைத் தலைவலிகள் ஏற்படுகின்றன. பல ஆண்டுகளாக, தலைக்குச் செல்லும் நரம்புகள் சுருங்கி இரத்த ஓட்டம் தடைப்படுவதால்தான் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் நம்பினார்கள். புதிய கண்டு பிடிப்புகளின்படி, மூளையைச் சேர்ந்த சில செல்களில் ஏற்பட்டுள்ள பரம்பரைக் குறைபாடுகள் தான் காரணம் (gentic disorder) என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படும்போது, மூளைக்குச் செல்லும் செல்கள் அழிந்துபோக வாய்ப்புகள் உண்டு. அதனால் தலைவலி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
பரம்பரை நோயா?
ஒற்றைத் தலைவலி பரம்பரையாக வரக்கூடியது என்று சொல்லப்படுகிறது என்றாலும், இது மரபில் உள்ள கோளாறால்தான் என்று திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. கணவன்- மனைவி இருவருக்கும் ஒற்றைத் தலைவலி இருந்தால் பிள்ளைகளுக்கு 75 சதவிகித வாய்ப்பு உண்டு. இருவரில் ஒருவருக்கு மட்டும் இருந்தால் 50 சதவிகித வாய்ப்புகள் உண்டு. அவ்வளவுதான். மற்றபடி, கட்டாயம் வரும் என்று சொல்லமுடியாது.
அறிகுறிகளை வைத்தே ஒற்றைத் தலைவலியை நெருங்க விடாமல் செய்ய முடியும். இதற்கு சில வழிகள்.
1. உணவுமுறையில் மாற்றம்:
சரியாக உணவு உண்ணாததும், ஒத்துக்கொள்ளாத சில உணவுவகைகளை உண்பதும், அளவுக்கு அதிகமாக உண்பதும் ஒற்றைத் தலைவலிக்கு முக்கியக் காரணங்களாகும். இதனால் நல்ல ஆரோக்கியமான உணவை, வேளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பால், காய்கறி வகைகள் நல்லது. இறைச்சி வகைகளைத் தவிர்த்தல் மிக நல்லது.
2. முறையான தூக்கம்:
தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் காலையில் எழுந்ததும் தலைவலிப்பதாகச் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. அதனால் நல்ல தூக்கம் வரச்செய்யும் வழி முறைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக தூக்கம் வரும்வரை படிப்பது.
walking_exercise3. உடற்பயிற்சி:
உடற்பயிற்சிதான் உடலில் உள்ள வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. இதனால் மூளை நன்கு செயல்படத் தொடங்கும். முறையான தொடர் உடற்பயிற்சி இருந்தாலே ஒற்றைத் தலைவலி அண்டாது.
4. சுற்றுச்சூழலில் கவனம்:
அதிக சூரிய வெப்பம் படுதல், வானிலை மாற்றங்கள், காற்றோட்டமில்லாத புழுக்கமாக சூழலில் வாழ்தல் ஆகிய சுற்றுச்சுழல்களாலும் சிலருக்கு தலைவலி வரும். அதனால் இவற்றைத் தவிர்த்தல் வேண்டும். காற்றோட்டமுள்ள இடத்தில் தூங்குவதும், மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வதும் மிக அவசியம்.
5. மது, புகை, காபி தவிர்த்தல் :
மது அருந்துதல், புகை பிடித்தல், காபி குடித்தல் சிலருக்கு தலைவலியை உண்டாக்கும். இவை முற்றிலும் நிறுத்தப்படல் வேண்டும். சிலருக்குக் காப்பி சாப்பிட்டால் தலைவலி நிற்பது போல் தெரியும். ஆனால் அது நிரந்தரமற்றதாகும்.
6. கவலை, சோர்வு, மனஅழுத்தம் வேண்டாம் :
அதிகமாகக் கவலைப்படுபவர்கள், அடிக்கடி சோர்வு அடைபவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வரும். இவற்றில் இருந்து விடுபட, மற்றவர்களுடன் நட்பாகப் பேசிப் பழக வேண்டும். மனம் விட்டுப் பேசி குறைகளைக் களைய வேண்டும்.
7. தடுப்புமுறைகள்:
ஒற்றைத் தலைவலி எதனால் வந்தது என்பதை அறிந்துகொண்டு அவற்றைத் தவிர்த்தலே மிக நல்லது. உதாரணமாக, ஒரு நிகழ்ச்சிக்குப் போனால் தலைவலி வந்திருக்கும். திரும்பவும் அந்த நிகழ்ச்சியைக் காணாது தவிர்த்தல். சில பொருட்கள் அலர்ஜியாகி தலைவலி கொடுத்திருக்கும். அவற்றைத் தவிர்த்து முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளலாம்.
8. மருந்துகள்:
இது போன்று ஒற்றைத் தலைவலி அல்லது பொதுவான தலைவலி அடிக்கடி வரும் போது, டாக்டர்களை அணுகித்தான் மருந்துக்களை சாப்பிட வேண்டும். தங்களுக்கு தெரிந்த மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதும் அல்லது தலைவலிக்கு மருந்துக் கடைகளில் தரும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதும் முறையானது அல்ல.
அதிக அளவில் மருந்து எடுத்துக் கொள்வதும் சிலருக்குத் தலைவலி வரக் காரணமாக இருக்கும். இதனால் மருத்துவர் ஆலோசனைப்படி மட்டுமே மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
aircondiion-11bபொதுவா ஒரு வரி சொல்வாங்க யாரவது வசதியா இருக்கறத பெருமையா சொல்லணும்னா “அவனுக்கென்ன ஏ.சி.யிலே பொறந்து ஏ.சி.யிலே வளர்ந்தவன் பா”ன்னு சொல்வாங்க. அப்படி நிஜமாவே வளர்ந்தா என்ன ஆகும்னு பார்க்கலாம்.

கடந்த 2 வருடங்களுக்குள் ஏ.சி.யில்லாத வீடுகளே குறைவு எனலாம். ஏனென்றால் அலுவலகங்களில் கோடைகால வெப்பத்திற்கு பயந்து ஏ.சி. அறைக்குள் முடங்கிக் கொள்ளும் ஒரு கலாசாரம் தான் தற்போது நகரங்களில் இருந்து வருகிறது.

அலுவலகங்களில் ஏ.சி.யை கண்டிப்பாக உபயோகிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால் அதே பழக்கத்தை வீட்டிலேயும் கடைப்பிடித்தால் என்ன ஆகும்? அதோடு அரை மணி நேரம் கூட ஏ.சி.யில்லாமல் இருக்கமுடியாதவர்களும் இருக்கிறார்கள்.

இதனால் சருமத்திற்கு எவ்வளவு கேடு தெரியுமா?

சருமம் அழகாகவும் பளபளப்பாகவும் இருந்தால் யாருக்குத்தான் பிடிக்காது. அப்படி சருமத்தை நன்றாக பாதுகாக்க விட்டமின் - டி உதவுகிறது. அந்த விட்டமின்- டி எதிலெல்லாம் கிடைக்கிறது என்றால் “சூரியப் பிரகாச விட்டமின்” என்றும் அறியப்படுகிறது. சூரியனின் உதவியுடன் உங்கள் உடல் விட்டமின் -டி யை உருவாக்கமுடியும்.

கோடை காலத்தில், சன்ஸ்கிரிம் உபயோகிக்காமல் பத்து முதல் 15 நிமிடங்கள் சூரியவெளிச்சத்திலிருந்தால் உங்களுக்குத் தேவையான விட்டமின்- டி சூரியனிலிருந்து கிடைக்கும். மற்றும் பால், முட்டையின் மஞ்சள்கரு போன்றவைகளிலிருந்தும் பெறப்படுகிறது.

air-condition-11நாம் பார்த்திருப்போம் வெளிநாட்டவர்கள் ’சன் பாத்’ எடுப்பதை. இங்கேயும் டூரிஸ்ட்டா வந்தா அவங்க சன் பாத் விரும்பி செய்வாங்க. அதற்கு காரணம் வெளிநாட்டில் சூரியன் எட்டிப்பார்ப்பது குறைவு.

நமக்கு அதன் அருமை தெரியவில்லை என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் எப்பொழுதும் ஏ.சி.யிலேயே இருப்பதுதான்.

தோல் சுருங்காம இருக்கணும்னா, வயது முதிர்வு சீக்கிரமாக தோன்றாமல் இருக்கணும்னா தோலில் ஈரப்பதம் இருக்க வேண்டும்.

நாம் பார்த்திருப்போம் பனிக் காலங்களில் தோல் வறண்டு விடும். சொரிந்தால் வெள்ளை வெள்ளையாய் கோடுகள் ஏற்படும். தோலில் ஒரு வறட்சி ஏற்படும். உதடுகள் கூட வெடித்து விடும். இதற்கு காரணம் தோலின் ஈரப்பததை பனி உறிஞ்சி விடுவதுதான்.

அதேதான் ஏ.சி.யும் செய்கிறது. ரூம் டெம்பரேச்சரை ஏ.சி. உபயோகப் படுத்தும் அறையிலிருந்து உறிஞ்சி எடுத்துவிடுகிறது. அதோடு நமது தோலிலிருந்தும் ஈரப்பதத்தையும் எடுத்துவிடுகிறது.

air-conditioner_11cபலமணி நேரம் ஏசியில் இருந்தால் நமது உடலில் இருக்க வேண்டிய வெப்பம் கூட குறைகிறது.

சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு ஏற்கனவே சருமம் வறட்சியாகத்தான் இருக்கும். இதிலே அவர்கள் ஏசியை உபயோகித்தால் யோசித்துப்பாருங்கள்?

இவ்வாறு நாம் சருமத்தை சரியாக பாதுகாக்காமல் அலட்சியமாக விட்டுவிட்டால் சருமத்தில் தோலின் அடிப்பகுதி வறண்டு விடும். வெண்மையான திட்டுக்கள் மற்றும் சொரிந்தால் செதில் செதிலாக உதிர்தல். இதைத் தான் ’வங்கு’ என்று கூறுகின்றனர். சரும நோய் மருத்துவர்கள்.

கோடைக்காலத்தில் அரை மணி நேரம் வெயிலில் நின்றால் சருமத்திற்கு தேவையான அளவு சத்து கிடைக்கும்.

ஆனால் நாம் அதையா செய்றோம். சன் ஸ்க்ரீன் லோஷன் இல்லாமல் வெளியே போறதே கிடையாது. வீட்டிற்கு வந்தாலும் ஏ.சி. அறையில் தான்.

ஏ.சி. உபயோகம் சருமத்திற்கு மட்டுமல்ல தலைமுடிக்கும் நல்லதல்ல. சீக்கிரமே வழுக்கை மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்னைக்கும் ஒரு Air-Conditioner-Series-Bகாரணம் ஏசி உபயோகம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஏ.சி.யை அலுவலகத்தில் தவிர்க்க முடியாது. குறைந்த பட்சம் வீட்டிலிருக்கும்போதாவது சற்று காற்றோட்டமான அறையில் அமரும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

வேண்டுமானால் கடுமையான கோடைகாலங்களில் வீட்டில் ஏ.சி. அறையை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த பழக்கம் உடலுக்கு மட்டுமல்ல நாட்டிலிருக்கும் மின்சாரப் பிரச்னை மற்றும் க்ளொபல் வார்மிங்கிற்கும் ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

-______0____6298முன்பெல்லாம் வயதானவர்களை மட்டுமே பாதித்து வந்த முழங்கால் மூட்டுவலி, இப்போது இளம் வயதினரையும் வாட்டி எடுக்க ஆரம்பித்திருக்கிறது. நடப்பதற்கு சோம்பேறித்தனப் பட்டு சொகுசு கார், இருசக்கர வாகனம் போன்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாதது போன்றவைகள்தான் மூட்டுவலி உண்டாக பிரதான காரணங்கள். மூட்டுவலி ஏற்பட்டால் இயல்பாக நடக்க முடியாது. உட்கார்ந்து எழுவதில் சிரமம் ஏற்படும். தவிர, நாள்பட்ட மூட்டுவலியால் வேறு பல உபாதைகளும் உண்டாகும் ஆபத்து உண்டு. இவற்றை எளிதில் தவிர்க்க முடியும். அதற்கென நவீன சிகிச்சைகளும் வந்துவிட்டன!

முழங்கால் மூட்டுவலி இணைப்புகளில் திடீரென்று வீக்கம் அல்லது அழற்சி உண்டாகும். ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ், ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் என்று இரண்டு வகை உண்டு. இவை இரண்டும் பெண்களை எளிதில் தாக்கும் நோய்கள் என்பது அதிரவைக்கும் உண்மை.

மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்னை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் மூட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.

மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்:

1) மூட்டழற்சி(osteo arthritis): 

இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு,
தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.

முழங்காலில் உள்ள இணைப்பிலும், எலும்புகளுக்கிடையிலும் ஒருவித ஜவ்வு இருக்கும்.c5dafacf-616a-4309-bf8b-6c5ebe0889e4_S_secvpf இதற்கு கார்டிலேஜ் என்று பெயர். இந்த ஜவ்வு தான் முழங்கால் மூட்டு தேய்ந்து போகாமல் பாதுகாக்கிறது. முழங்கால் மூட்டும், எலும்பும் ஒன்றோடொன்று ஊராய்ந்து போகாமல், எளிதில் அசைவதற்கு ஜவ்வு அவசியம். ஒருவேளை இந்த ஜவ்வு தேய்ந்து போகும் போதுதான் வலி உண்டாகிறது.

எங்காவது விழுந்து அடிபட்டு நீண்ட நாட்கள் படுக்கை வாசம் செய்பவர்களால் எழுந்து நடக்க முடியாது. இதனால் மூட்டுகளில் அசைவு குறைந்து போகும். அப்போதும் மூட்டுவலி வரும். உடல் எடை கூடுவதாலும், முறையற்ற உணவுப் பழக்கத்தாலும் கூட முழங்கால் மூட்டுகளில் வலி வருவது தவிர்க்க முடியாது.

பெண்கள் பேறு காலத்திற்குப் பின்னர் உடலை கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். இதனால் அவர்களது உடல் எடை கூடும். அதனால் முழங்கால் மூட்டுகளில் வலி வரும். வலி விடாது! படுக்கையிலிருந்து எழுந்திருக்கும் போதும், வலி மெல்ல மெல்ல இடுப்புக்கும் பரவும். சில நேரங்களில் தசைப்பிடிப்பும் ஏற்படும்.

2) முடக்குவாதம்(rheumatoid arthritis): 

pain_6இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள்,மணிக்கட்டு,கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.

ஒவ்வொருவருக்கும் உடலில் குறிப்பிட்ட அளவு நோயெதிர்ப்புச் சக்தி செல்கள் இருக்கும். இந்தச் செல்களில் பாதிப்பு ஏற்படும்போது முழங்கால் மற்றும் கால்களின் இணைப்புகளில் வீக்கமும் அழற்சியும் உண்டாகும். இதுவே ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்(Rheumatoid Arthritis). குடும்பத்தில் முன்னோர்கள் யாரேனும் இருந்தால், பரம்பரையில் மற்றவர்களுக்கு வரும். இந்தப் பாதிப்பு காரணமாக கைவிரல்களில் பிரச்னை உண்டாகும்.

குறிப்பாக, காலை நேரங்களில் கைவிரல்கள் மற்றும் முழங்கால் மூட்டுகளில் இறுக்கிப் பிடித்த மாதிரி உணர்வு வரும், வீக்கம் உண்டாகும், இதனால் வலி ஏற்படும். குளிர்காலங்கள், மழை பெய்யும் காலங்களில் வலி அதிகரிக்கும். கைவிரல்களை நீட்டவோ, மடக்கவோ முடியாது. உடலில் உள்ள மற்ற இணைப்புத் திசுக்கள் பாதிக்கப்படும். நுரையீரல், இருதயம், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் சூழலும் உண்டு.

அறிகுறிகள்:

மூட்டழற்சி: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும். முடக்குவாதம்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.

வலிக்கான காரணம்:

tamil_anatomy_of_knee_jointமுக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம். முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரணமாகும். பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.

சிகிச்சைகள்:

மூட்டுவலியைக் கட்டுப்படுத்த மட்டுமே முடியும். நிரந்தரமாகக் குணமாக்க முடியும் என்றுknee_joint_pain சொல்வதற்கில்லை. ஆதலால் வலி தீவிரமடையாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸில் வலிதான் பிரச்னையே. ஆதலால் வலி நிவாரண மருந்துகள் சிபாரிசு செய்யப்படும். அதனால் வலிதானே என்று அலட்சியப்படுத்தக் கூடாது. அப்படிக் கண்டுகொள்ளாமல் விட்டால், போகப் போக கை, கால்களை அசைக்க முடியாத நிலை ஏற்படலாம். ஒரு கட்டத்தில் அவற்றின் வடிவம் மாறிப் போய்விடும் ஆபத்து உண்டு.

மூட்டுவலி, வயதானவர்களுக்கு மட்டும் தான் என்றில்லை. எந்த வயதினருக்கும் வரலாம். வயது ஏறஏற வலி அதிகரிக்குமே தவிர குறையாது. ஆதலால் ஆரம்பத்திலேயே கவனிப்பது நல்லது.

முழங்கால் மூட்டுவலி மெனோபாஸ் வயதிலிருக்கும் பெண்களையே அதிகம் பாதிக்கிறது என்ற கருத்து உண்டு. ஆனால், இது தவறு. மாறாக இருபது, முப்பது வயதுடைய பெண்களை பாதிப்பதோடு, மெனோபாஸ் நெருங்கும்போது வலி அதிகரிக்கிறது என்பதே உண்மை.

முழங்கால் மூட்டுவலியின்போது, இணைப்பில் ஊசியின் மூலம் மருந்து கொடுக்கப்படுவதும் உண்டு. பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஊசி போடப்படும்.

மருந்துகளில் குணமாகாதபட்சத்தில் அறுவை சிகிச்சையே நல்லது. முதலில் ஆஸ்ரயோட்டமி செய்து கொள்ளலாம். பின்னர் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரலாம்.

ஆனால், ரூமட்டாய்டு ஆர்த்ரைட்ஸதிக்கு மருந்துகள் மட்டுமே போதுமானது. தேவையேற்பட்டால், பிசியோதெரபி செய்து பிரச்னையைக் குறைக்கவும்.

தவிர்ப்பது எப்படி?

walking-the-dog* உடல் எடையைக் குறைப்பது, உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்வது.

* நடப்பது, நீச்சலடிப்பது, சிறுசிறு வேலைகள் செய்வது.

* வாரம் ஐந்து நாட்கள் மிதமான நடைப்பயிற்சி நல்லது.

* சமச்சீர் உணவு, பால், தயிர் அவசியம்.

* கொழுப்புச் சத்துள்ள உணவு வேண்டாம்.

* நார்ச்சத்து உணவுகள் நல்லது.

உணவுப்பழக்கம்:

* வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும். காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும்.  கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.

* கால்சியம் அதிகம் உள்ள பால்,பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்

தவிர்க்கவேண்டியவை: காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்.

Neck-pain-general.jpgஎண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பது சித்தர்களின் முதுமொழியாகும். மனிதனின் இயக்கங்கள் அனைத்திற்கும் உள்ள சூட்சும பகுதிதான் சிரசு. பஞ்ச பூதங்களின் செயல்பாடுகள், பிரபஞ்ச சக்தியை உணரும் தன்மை அனைத்தும் சிரசின் வழியே தான் நடைபெறுகிறது. இத்தகைய சக்திகள் அனைத்தையும் தன்னுள் அடக்கி பல கோடிக்கணக்கான அணுக்களைக் கொண்ட பந்து போல தோற்றமளிக்கும் சிரசை தாங்கி நிற்பது கழுத்துப்பகுதிதான்.
கழுத்து உடலின் முக்கிய உறுப்பாகும். கழுத்தில்தான் முக்கிய நாடி நரம்புகள் நெருக்கமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும். உடலுக்கும் சிரசுக்கும் இரத்தம் மற்றும் நரம்புகள் பிரயாணம் செய்கின்றன. கழுத்தின் மையமாக தண்டுவட எலும்புகள் உள்ளன. இதில் ஏழு எலும்புகள் உள்ளன. அந்த எலும்பு சட்டத்தைச் சுற்றி தசைகளும், தசை நார்களும் உறுதி கொடுக்கின்றன. இந்த கழுத்து எலும்பிலிருந்து தான் கைகளுக்கு போகும் நரம்புகள் வெளிவருகின்றன.

மேலும் உணவுக்குழாய், மூச்சுக்குழாய் உள்ளன. மூளைக்கும் இருதயத்திற்கும் இடையேயான இரத்த ஓட்டம் கழுத்தின் வழியேதான் நிகழ்கிறது.

முதுமைப் பருவத்தில் கழுத்து எலும்புகளின் இணைப்புகளில் ஏற்படும் தேய்மானத்தைத்தான் செர்விகல் ஸ்பாண்டிலோஸிஸ் என்று அழைக்கின்றனர். இதை தமிழில் தோள்பட்டை வாதம் என்கின்றனர். இது பொதுவாக நடுத்தர வயதுடையோரிடமும், முதியோரிடமும் குறிப்பாக ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வோரிடமும் காணப்படுகிறது.

குடல், வயிறு இவற்றின் மூலப் பகுதிகளில் உஷ்ணம் அதிகமானால் வயிற்றுப் பகுதியில் உள்ள அபான வாயுவின் அழற்சி காரணமாக குடல் மேலும் உஷ்ணப்பட்டு உடலில் உள்ள நீரானது அபான வாயுவால் மேல்நோக்கி தள்ளப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நீர் தலைப்பகுதிக்கு வந்து கோர்த்துக்கொள்ளும்.

Neck-pain-general.jpgபின்பு கழுத்து நரம்பு வழியாக முதுகுப் பக்கம் (பின்பகுதி) நீர் இறங்கும். இவ்வாறு இறங்கும் நீரானது கழுத்துப் பகுதிக்கு வரும்போது அதன் தன்மை மாறி பசை போல் கடினமாகிறது. பின்பு அது இறுகித் தடித்து கடினமானது போல் ஆகிவிடும். இதுதான் தோள்பட்டை வாதம். உதாரணமாக கடலில் உள்ள நீரானது அதிக வெப்பத்தால் ஆவியாவி மேல்சென்று மேகமாக மாறி பின் மழை நீராக பொழிவது போல் குடலில் உள்ள நீர் உஷ்ணமாகி ஆவியாக மாறி மேல்நோக்கி சிரசுக்கு சென்று அங்கு நீராக மாறி பிறகு கழுத்துப் பகுதிக்கு இறங்குகிறது. இதைத்தான் சித்தர்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்கின்றனர்.

அறிகுறிகள்:

கழுத்துப் பகுதியில் வலி ஏற்படும். கைகள் மரத்துப் போகும். சுண்டுவிரல் செயலிழுந்து போகும். மன எரிச்சல் உண்டாகும். தூக்கமின்மை ஏற்படும். எப்போதும் கோபம் கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். கண் எரிச்சல், உண்டாகும். எழுதும்போது கை விரல்களில் வலி ஏற்படும். படிக்கும்போது கழுத்து வலி உண்டாகும். மேலும் குனியும் போதும், நிமிரும்போதும் தலை சுற்றி கண்ணில் மின்னல் போல் தோன்றி உடல் அதிரும். நரம்புகள் இறுகும். ஒருசிலருக்கு நடக்கும்போது தலை சுற்றல் உண்டாகும்.

கழுத்து கடுத்து, தடித்து காணப்படும். மன நிம்மதியின்றி காணப்படுவார்கள். பித்த உடற்கூறு கொண்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் உண்டாகும். வாத உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து இறுகி திருப்ப முடியாத நிலை ஏற்படும். கப உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து பகுதி தடித்து உப்பு நீர் கலந்து கருத்துப்போய் பட்டை பட்டையாக தடித்து காணப்படும்.

அதிக வியர்வை உண்டாகும். கழுத்துப் பகுதியில் எரிச்சல் தோன்றும். ஒரு சிலருக்கு இடது பக்கமாக கழுத்துப் பகுதியிலிருந்து நீர் கீழிறங்கி தோள்பட்டையில் வலியை உண்டாக்கும். இது நெஞ்சு வலியைப் போன்று தோன்றும். நெஞ்சு வலிக்கும் தோள்பட்டை வலிக்கும் வித்தியாசம் கண்டறிவது கடினம்.

தொடர்ந்து பல நாட்களாக கழுத்து வலி காணப்படும் அந்த வலியானது தோள்வரை பரவும், கழுத்துப் பகுதியில் கை பட்டவுடன் வலி தோன்றும்.

கழுத்து வலி வரக் காரணம்:

Neck-pain-general.jpgமலச்சிக்கல், குடலில் வாய்வுக் கோளாறு, மூலச்சூடு, தலையில் நீர் கோர்த்தல், மன அழுத்தம் போன்ற காரணங்களால் தோள்பட்டை வலி உண்டாகிறது.

கழுத்துவலியை தவிர்க்கும் முறை:

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும். வாயுவை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது தாகம் ஏற்பட்டால் குளிரூட்டப்பட்ட நீரோ, குளிர்பானங்களோ அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது.

வாகனங்களை மிதமான வேகத்தில் ஓட்ட வேண்டும். அடிக்கடி பிரேக் போடுவதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை சிறு சிறு தூரங்களுக்கு நடந்து செல்வது நல்லது. ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

கழுத்து வலிக்கு இந்திய மருத்துவ முறையில் நிறைய மருந்துகள் உள்ளன. குறிப்பாக வர்ம பரிகார முறையில் உள் மருந்துகள் சில கொடுத்து கழுத்துப் பகுதி தோள்பட்டைப் பகுதியில் எண்ணெய் தடவி சீராக கழுத்தை நீவிவிட்டு வந்தால் நாளடைவில் இரத்த ஓட்டம் சீராகும். தோள்பட்டை வலியும் நீங்கும்.

Neck-pain-general.jpgவர்ம பரிகார முறையில் இதை எளிதாக குணப்படுத்தலாம். அறுவை சிகிச்சை தேவையில்லை.

இதுபோல் சித்த மருத்துவ முறையில் சீர்கேடடைந்த உறுப்புகளுக்கு பலம் கொடுக்க கிழி ஒற்றடம், பிழிச்சல் முதலியன செய்வார்கள். இவ்வாறு செய்து வந்தால் நோயிலிருந்து விடுபட்டு உறுப்புகளில் உள்ள வலி, குத்தல், குடைதல், இசிவு, பிடிப்பு, வீக்கம் முதலியன மெல்ல மெல்லக் குறைந்து அவற்றின் தளர்ச்சி, செயலின்மை போன்றவை நீங்கி உடல் பலம் பெறும்.

இந்த முறையில் சிகிச்சை செய்வதின் மூலம் கழுத்து வலிக்கு அறுவை சிகிச்சை செய்வதை தவிர்க்கலாம்.

உணவு :

பொதுவாக வாயுவின் சீற்றத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளைக் குறைத்து எளிதில் சீரணமாகக் கூடிய சத்துள்ள பொருட்களை உண்பது நல்லது. கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒதுக்க வேண்டிய உணவுகள்:

மொச்சை, உருளை, தக்காளி, வாயுவை உண்டாக்கு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

படுக்கை:

தலையைணை இல்லாமல் தூங்குவது நல்லது. மேடுபள்ளம் இல்லாத சமமான படுக்கையே நல்லது. அதிக குளிர்காற்று உடலில் படும்படியாக படுக்கக்கூடாது.

இத்தகைய நடைமுறைகளை கடைப்பிடித்தால் தோள்பட்டைவாதம் என்ற கழுத்து வலியிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.


cardio-exerciseஉடல் எடை அதிகமானவர்களைப் பார்த்து, ’நீ எந்தக்கடையில அரிசி சாப்பிடுகிறாய்?’ என்று கிண்டலாக கேட்பார்கள். அதிகமாகச் சாப்பிடுவதைத்தான் அவ்வாறு கேலி செய்வார். பெண்களாக இருந்தால் திருமணமாகி குழந்தை பிறந்தபிறகு ஏற்படும் தைராய்டு பிரச்னை காரணமாக உடன் எடை அதிகரிக்கலாம். உடற்பயிற்சியின்மை எப்போதும் ஓய்வு, நொறுக்குத் தீனி, போன்றவை எடையைக் கூட்டிவிடும்.

ஆண்களுக்கு அதிகமாக சாப்பிடுவதாலும், மது அருந்துவதாலும் எடை கூடும். மனதில் மகிழ்ச்சி அதிகமானால் கூட எடை கூடுவதை நடுத்தர வர்க்கத்தினரிடையே காணலாம். குண்டானவர்கள் தங்கள் பணிகளை உற்சாகமாய் செய்ய முடியாது. மூட்டு வலி, முதுகு வலி, தசை வலி என அடிக்கடி சிரமப்பட நேரிடும். தங்கள் வயதைவிட முதியவராகவும், கவர்ச்சியமான தோற்றமும் இல்லாமல் இருப்பர்.

உடல் பருமன் என்பது இப்போது ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஒரே இடத்தில் அமர்ந்து உடல் உழைப்பு இன்றி பணிபுரிதல், ஒழுங்கற்ற மாதவிடாய், சமச்சீரற்ற உணவுப்பழக்கம், ஹார்மோன் குறைபாடு, மன அழுத்தம், கருவற்றலின் பின் ஏற்படும் கோளாறுகள், மது மற்றும் புகைப்பழக்கம் போன்றவற்றை உடல் பருமனுக்குக் காரணமாகக் கூறலாம்.

உடல் பருமன் பிரச்னை காரணமாக இதய நோய், சர்க்கரை நோய், எலும்புத் தேய்வு, உயர் weightரத்த அழுத்தம், மனக் கவலையால் சோர்வு, தன்னம்பிக்கையின்மை போன்ற விளைவுகள் ஏற்படும். உடல் பருமனைக் குறைக்கவும் மேற்கூறிய நோய்கள் வராது காக்கவும் யோகாவுடன் மூச்சு பயிற்சி, தியானம், சிறு உடற்பயிற்சிகள், எடை மீண்டும் கூடாமல் இருக்க சரிவிகித உணவு முறை போன்றவையே ஆகும்.

உடல் எடையைக் குறைப்பதற்காக சிலர் திடீரென உணவை குறைத்துக் கொண்டு, மெலிந்து பலவீனமான பின் மீண்டும் ஏற்கனவே இழந்ததற்கு அதிக அளவிலான உணவை எடுத்துக் கொள்வார்கள். இது தவறான அணுகுமுறை.

உடற்கூறு நிபுணர்களின் கருத்தின் படி, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் படிப்படியாக எடையைக் குறைக்க முன்வர வேண்டும். பொதுவாக வாரம் ஒன்றுக்கு 450 கிராம் அளவிற்கே எடை குறைய வேண்டும். அப்போதுதான் உடலில் பாதிப்பு ஏற்படாது.

ஏன் உடல் பருமனாகிறது?

binge-eating* குடும்ப வாயிலாக வரக்கூடியதால் (உதாரணம் : தாத்தா-அப்பா-மகன்) – Genetic.

* உடல் தனது தேவைக்கு அதிகமாக உணவு கிடைக்கும் பட்சத்தில், உணவை கொழுப்பு சத்தாக மாற்றி சேமித்து வைத்து கொள்கிறது (பிற்கால உபயோகத்திற்காக), ஆனால் அது அந்த கொழுப்பு சத்தை உபயோகிப்பதே இல்லை, ஏனென்றால் நாம் தினமும் தேவைக்கு அதிகமாக உண்பதால் உடலிற்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் மறுபடியும் நிறைய கொழுப்பு சத்தாக சேமித்து வைக்கிறது – அதுவே உடல் பருமனடைய காரணம்.

* அளவிற்கு அதிகமாக ஸ்நாக்ஸ் மற்றும் கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவை உண்பதால்.

* உடலிற்கு தகுந்த வேலை தராமல் இருப்பதால்.

* மன உளைச்சல் அதிகமானால் பெரும்பாலான மக்கள் சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள், ஆகவே இந்த நவீன உலகத்தில் மன உளைச்சல் உடல் பருமனாவதருக்கு பெருமளவு காரணமாக உள்ளது.

* நீண்ட காலமாக குறிப்பிட மருந்துகளை எடுத்து வருவதால். For example – Prednisolone, Anti-depressants.

* குறைவான நேரம் உறங்குவது. அல்லது மதிய நேரம் சாப்பிட்டவுடன் உறங்குவது.

* சில வகையான நோய்களும் உடல் பருமன் உண்டாக்கும். For example – Hypothyroidism,Cushing’s syndrome போன்றவை உடலுக்கு தேவையான ஹார்மோன்களை குறைவாகவோ,அதிகமாகவோ சுரப்பதால் உடல் பருமனடைகிறது.

அடிப்படையில் உடல் பருமனைக் கட்டுக்குள் கொண்டு வருவது எப்படி ?

* ஆரோக்யமான முறையில் உடலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமானால் சாப்பிடாமல் இருப்பதாலோ, திடிரென அதிகமான உடற்பயிற்சி செய்வதாலோ வராது.

* உதாரணமாக நீங்கள் திடீரென 5 கி.மீ. ஒடுவதாலோ, 2 வேளை உணவை விட்டு விடுவதாலோ உடல் பருமன் குறையாது. பருமன் குறையும், உண்மை! ஆனால் கூடவே ஆரோக்யமும் குறையும். மன உளைச்சல் அதிகம் ஆகும்.

* ஆகவே ஆரோக்யமான முறையில் உடலை குறைக்க முயற்சி செய்வோம்.

எப்படி ஆரோக்யமான முறையில் உடலை குறைக்க முடியும்?

1. உணவுமுறை :

* முதலில் சொல்லியபடி நமது உடலில் சேர்ந்திருக்கும் அதிகமான கொழுப்புச் சத்தே உடல் for_blog2பருமனுக்கு காரணம் என்று பார்த்தோம். அத்தகைய கொழுப்பு சத்து 2 வகைப்படும். a) Poly-unsaturated and Mono-unsaturted – Good Fat. b) Saturated and Trans fat – Bad fat. இதில் good fat வகைகள் அதிகமாக காய்கறி மற்றும் பழங்களில் காணப்படும், அவை அதிகமான Cholesterol-ஐ குறைக்கும். அதற்கு மாறாக Bad fat வகைகள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள உணவு வகைகளில் அதிகம் உள்ளது,இவை உடலிற்கு தீங்கு செய்ய கூடியவை (அதிக அளவில் எடுக்கும் போது) Bad fat மிக்க பொருள்களை குறைக்கவும் – பால், சீஸ், மாட்டுக்கறி, ஐஸ் க்ரீம், பனீர், பாம் ஆயில், தேங்காய், கோழிக்கறி, முட்டை மஞ்சள்கரு, பீட்ஸா, பர்கர், ஃப்ரைட் ரைஸ், சாக்லேட், சிப்ஸ், க்ரீம்... மற்றும் பல... அதற்கு பதில் Good fat உணவில் சேர்த்து கொள்ளலாம். Good fat – ஆலிவ் ஆயில், சோயாபீன், சோளம், வெஜிடெபிள் ஆயில், போன்றவை....

2. வண்ணமிகு உணவு :-

separate-foodவண்ணமிகு உணவு என்றதும் கடைகளில் தயாரிக்கும் நிறமேற்றப்பட்ட உணவுகளை வாங்கி சாப்பிடக்கூடாது. காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்ளவேண்டும்.

அதிலும் குறைந்தது 5 வண்ணங்களாவது நமது தட்டை அலங்கரிக்க வேண்டும். உதாரணம் : 1 காரட் + ஒரு கீரை வகை + 1 ஆப்பிள் + 100 கிராம் கடலை வகை + ஆரஞ்ச் ஜூஸ் 1 கப்.

3. உணவு முறையில் மாற்றம் தேவை :

I. நீங்கள் உடல் எடையை உண்மையாகவே குறைக்க விரும்பினால் நீங்கள் உங்கள் உணவு பழக்கத்தை மாற்றியே ஆக வேண்டும். நீங்கள் தினமும் 300-500 கலோரிகள் குறைப்பதால் ஒரு வாரத்தில் 1-2 கிலோ எடை குறையும், அதுவே ஆரோக்யமான முறை.

II. ஒரு நாளைக்கு 1500 கலோரிகள் நீங்கள் எடுக்க வேண்டும். அதை 3 வேலையில் உண்ணாமல் 5 (அ) 6 சிறு சிறு பாகங்களாக உண்ண வேண்டும். 1500 கலோரிகளுக்கும் குறைவாக உண்ணக் கூடாது. அது பல பிரச்னைகளை உண்டாக்கும்.

III. கொழுப்பு சத்தை விட்டு முழு தானியங்கள் (ஓட்ஸ், முழு தானிய ப்ரெட், பாப் கார்ன், சிகப்பு அரிசி (பிரவுன் ரைஸ்), பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்க்கவும்.

IV. கூல் டிரிங்க்ஸ் மற்றும் மில்க் ஷேக்ஸ் போன்றவற்றைத் தவிர்த்து நிறைய தண்ணீர் drinking-waterஅருந்த வேண்டும்.

V. Tea,coffee போன்றவற்றில் சர்க்கரையின் அளவை வெகுவாக குறைக்கவும் அல்லது சர்க்கரையைத் தவிர்க்கவும்.

VI. ஸ்நாக்ஸை (நொறுக்குத்தீனியை) தவிர்க்கவும் (பிஸ்கட்ஸ், குக்கீஸ், கேக்ஸ், சிப்ஸ் போன்றவைகள்) இவற்றை எல்லாம் ஒரேடியாக தவிர்க்க அவசியம் இல்லை, எப்பொழுதாவது பார்ட்டி போன்ற சமயங்களில் சிறு அளவு உண்ணலாம். ஆனால் தினமும் பார்ட்டி இருந்தால் நாங்கள் பொறுப்பல்ல.

VII. இதுதான் உணவு பழக்கத்தில் கடைசியாக முக்கிய குறிப்பு. காலை உணவை (Breakfast) எக்காரணம் கொண்டும் தவிர்க்க கூடாது,அது பசியை ஏற்படுத்தி மற்ற வேளைகளில் நிறைய உணவு உட்கொள்ள வழிவகுக்கும்.

டயட் (Diet) என்பது?

Heart-Healthy-Foods* நீங்க பொதுவாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உபயோகிக்க பயன்படுத்தும் வசனம்... நான் டயட்டில் இருக்கேன். டயட் என்றால் என்ன பண்ணுவீர்கள் என்று கேட்டால் நான் எதுவும் சாப்பிடமாட்டேன் என்று கூறுவார்கள். இதுதான் பொதுவாக கடைப்பிடிக்கப்படும் டயட்.

* ஆனால், டயட் என்றால் பட்டினி கிடப்பதில்லை. அதேபோல் சுவை குறைந்த உணவை சாப்பிட வேண்டும் என்பதும் இல்லை.இப்படி செய்ய ஆரம்பித்தால் வெறுப்புதான் வரும். எதையும் மனதிற்கு பிடித்து செய்ய வேண்டும். ஒரு வேளை கூட பட்டினி கிடக்காதீர்கள்.அப்புறம் உங்களையும் அறியாமல் அடுத்த வேளை அதிகம் சாப்பிட்டு விடுவீர்கள். மீண்டும் உணவு கொழுப்பாக உடலில் தங்கிவிடும்.காலை உணவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

* ஆவியில் வேக வைத்த உணவு, நீர் காய்கறிகள் என்று திட்டமிட்டு சமையுங்கள்.வாரம் ஒரு முறை பொரித்த உணவு,ஸ்வீட்ஸ் என்றுகூட சாப்பிடலாம். முக்கியமாக டயட் இருந்தாலும் நம் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் தொடர்ந்து கிடைக்குமாறு பார்த்துக் கொளுங்கள்.புரோட்டீன்,கார்போஹைடிரேட்,நல்ல கொழுப்பு, கால்ஷியம்,இரும்புச் சத்து முதலியவை நம் உடலுக்கு கண்டிப்பாக தேவை. இதன் அளவு குறைந்தால் முடி கொட்டுதல்,ரத்த சோகை, எலும்பு தேய்மானம் முதலியவை ஏற்படும். பருப்பு, கீரை, அவித்த முட்டை, சாதம், பால் முதலியவை சேர்த்துக் கொள்ளுங்கள்.சமைக்கும் முறையில் அதிகம் கொழுப்பு சேர்ந்து விடாமல் செய்து சாப்பிடுங்கள்.

* டயட்டில் ஒன்று சொல்வார்கள். வெள்ளையாக இருப்பவற்றை, குறைந்த அளவு சேர்த்துக் Healthy-Food-Guide3கொள்ளவேண்டும் என்று. ஜீனி,உப்பு,சாதம்,பால்,தயிர் போன்றவை தான் இப்படி அளவை குறைக்க வேண்டிய பொருட்கள். நிறைய பேர் Full Cream milk, Skim Milk க்கு உள்ள வேறுபாட்டை அறியாமல் இருக்கிறார்கள்.Skim milk தண்ணீரை போன்று இருப்பதால் பலரும் அதை Diluted Full Cream milk அதாவது தண்ணீர் சேர்க்கப்பட்ட பால் என்று நினைத்து விடுகிறார்கள்.அதனால் அதை வாங்கி உபயோகப்படுத்துவதும் இல்லை. Skim milk என்பது கொழுப்பு நீக்கப்பட்ட பால்.ஆனால் பாலில் உள்ள அத்தனை சத்துக்களும் அப்படியேதான் இருக்கும்.எனவே உடல் எடை குறைய skim milk உபயோகிக்கலாம். சத்துப் பற்றாக்குறை ஏற்படாது.

* வாரம் ஒரு முறையாவது ஓட்ஸ்,பார்லி சேர்த்துக் கொள்ளுங்கள்.ஓட்ஸ் உடம்பில் உள்ள கொழுப்பையும்,பார்லி உடம்பில் அதிகம் உள்ள நீரையும் குறைக்கும்.ஆனால் பார்லியை அதிகம் முக்கியமாக கருவுற்றிருக்கும் பெண்கள் உபயோகப்படுத்த வேண்டாம்.இது நீரின் அளவை குறைத்து சிசேரியனில் கொண்டு விட்டுவிடும்.சிலர் கால்,கை வீக்கம் கர்ப்ப காலத்தில் ஏற்படும்போது அதிகம் பார்லியை உட்கொண்டுவிடுவதால் இப்படி நேர்ந்துவிடுகிறது.இதற்கு மாற்றாக வெந்தயக்கஞ்சி செய்து சாப்பிடலாம்(கர்ப்பிணிகள்).

புரதம் அவசியம்:

Healthy-Eating-Final3உடல் எடையை குறைக்கிறேன் பேர்வழி என்று சத்தான உணவுகளை தவிர்க்க வேண்டாம். அது உடலின் பலத்தை குறைத்துவிடும். உடலின் திசுக்களுக்கு தேவையான புரதச்சத்து நிறைந்த உணவுகளை அவசியமான அளவில் உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

முட்டையின் வெள்ளைக்கரு தினமும் எடுத்துக்கொள்ளலாம். மஞ்சள் கருவை தவிர்த்து விடலாம். ஏனெனில் அதில் அதிக அளவு கொழுப்பு சத்து உள்ளது.

உடற்பயிற்சி தேவை :

உடற்பயிற்சி என்றாலே ஜிம் போய்தான் செய்யவேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே Exercise2எளிமையான எக்ஸர்சைஸ்களை செய்யலாம். இதனால் உடலில் தேங்கும் தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுவதோடு, உடல் நலமும் பாதுகாக்கப்படும். உடல் பருமனால் இருதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றை தவிர்க்க நடந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்தே செல்லலாம். அதனால் கலோரியும் எரிக்கப்படும், உடலும் சிக் என்று ஆகும்.

உங்களது லைப்ஸ்டைலுக்கு ஏற்றார்போல் உடல் பயிற்சியை அமைத்துக் கொள்ளுங்கள்.உங்களால் பிட்னெஸ் செண்டருக்கு தொடர்ந்து சென்று பயிற்சி செய்ய முடியும் என்றால் மட்டுமே அதில் சேருங்கள். குழந்தை வைத்திருப்பவர்கள்,குழந்தையை ப்ராமில் வைத்து தள்ளிக் கொண்டு வாக்கிங் போகலாம்.அவர்களுக்கு வேடிக்கை காண்பிக்க வெளியில் அழைத்து சென்றது போலிருக்கும்.வாக்கிங் செய்வது மிகவும் அவசியம்.உடம்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் குறைக்க நினைக்காதீர்கள்.வாக்கிங்,ஜாகிங் இப்படி வெளியே செல்லும் எந்த பயிற்சியும் செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே உடல் பயிற்சி செய்யலாம்.ஒழுங்காக கற்றுக் கொண்டு அல்லது புக்கில் படித்து புரிந்து,அதற்கென உள்ள வீடியோக்களை வாங்கிப் பார்த்து வீட்டினுள்ளேயே செய்யலாம்.

எடைக் குறைப்பு சாதனங்கள் :

elliptical_trainerஉடல் எடையை குறைப்பதற்காக விற்பனை செய்யப்படும் சாதனங்கள், மாத்திரைகள் போன்றவைகளைப் பயன்படுத்தினால் உடல் எடை குறையும் என்பது அனைவரின் நம்பிக்கை. இந்த பொருட்கள் உடல் எடைக்குறைப்பிற்கு உதவி புரியுமே தவிர முழுவதுமாக அவற்றை மட்டுமே நம்பக்கூடாது என்கின்றனர் உணவியலாளர்கள். நமது உடலை கட்டுப்பாட்டிற்குள் வைக்க நாம் சரிவிகித சத்துள்ள உணவுகளை உட்கொண்டு உடல் எடையை குறைக்கலாம் என்பதே அவர்களின் அறிவுரை.

Exercise,Diet இல்லாமல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல. Diet என்ற வார்த்தையை உபயோகப்படுத்தாமல் ஹெல்தியாக சாப்பிடுகிறோம் என்று நினையுங்கள். நிச்சயம் சரியான டயட்டும்,உடற்பயிற்சியும் எடையை குறைக்கும்.பரம்பரை காரணமாக சிலர் குண்டாக இருப்பார்கள். அவர்களும் முயன்றால் எடையை நிச்சயம் குறைக்கலாம்.உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள்,மருத்துவர்கள் ஆலோசனை கேட்டு உடற்பயிற்சி செய்யலாம்.

உடல் எடையை குறைக்க சில வழிமுறைகள்:

news-graphics-2007-_650149a* சாப்பாட்டை குறைத்து உடற்பயிற்சி ஈடுபடுவதுதான் சிறந்தது.

* சரியான நேரத்தில் சாப்பிடவும்.

* எண்ணெப் பதார்த்தங்களை தவிர்க்கவும்.

* மாமிச உணவு வேண்டவே வேண்டாம்.

* மதிய உணவில் காய்கறிகள் அதிகமாகச் சேர்க்கவும்.

* இரவில் பாதி சாப்பாடு அல்லது சிற்றுண்டி பாதி வயிற்றுக்கு மட்டும் சாப்பிட்டு மீதிக்கு தண்ணீர் குடிக்கவும். * பால், தயிர், பச்சை வெங்காயம் (50 கிராம்) சாப்பிடவும்.

* பசிக்கும்போது நொறுக்குத்தீனி தவிர்த்து தண்ணீர், தக்காளிச்சாறு அல்லது முட்டைகோஸ் சாப்பிடலாம்.

* மாவுச்சத்து குறைப்பதன் மூலம் படுவேகமாக உடல் எடை குறைய வாய்ப்புண்டு.

* வயதுக்கேற்ப உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்து செய்யவும். நடத்தல், ஓடுதல் எதுவாக இருந்தாலும் சிறந்தது.

* மூட்டு வலி இருந்தால் சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்றவை உகந்தவை.

Oct25.1* சோம்பேறித்தனமாக வீட்டில் ஓயாது ஓய்வெடுக்காமல் ஏதாவது ஒரு வேலையில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டால் சக்தி தீர்ந்து உடல் பருமனாவதைத் தடுத்துவிடும்.

* விடியற்காலையில் மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால் விரைவில் உடல் இளைத்து விடும் தேன் உடலில் உள்ள கொழுப்புகளை எளிதில் கரைத்து விடும்.

* இஞ்சியை சாறு பிழிந்து தேன் விட்டு சூடு படுத்தி ஆற வைத்து காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும் மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு வெந்நீர் அருந்தி வந்தால் தொப்பை குறையும்.

* உடல் எடையை குறைக்க உணவில் கொள்ளு சேர்க்க வேண்டும்.

* பப்பாளியை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

* வாழை தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இவற்றில் எதாவது ஒன்றை வெறும் வயிற்றில் குடித்து வர உடல் எடை குறையும் அழகான தோற்றம் கிடைக்கும்.

நாம் உண்ணும் உணவை எப்படி உண்ண வேண்டும் என்று உலகப் பொதுமறையாம் திருக்குறளில் வள்ளுவப் பெருந்தகை அப்பொழுதே கூறியிருக்கிறார்.

"மாறுபாடு இல்லாத உண்டிமறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு"

- தனது உடலின் இயல்புக்கு மாறுபாடு இல்லாத உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண yoga-poseவேண்டும். உடலுக்குப் பொருந்தும் உணவை மனம் போல் உண்ணாமல் அளவு அறிந்து உண்ண வேண்டும். அவ்வாறு உண்டால், தனது உயிருக்கு நோய்களால் எந்தத் துன்பமும் வராது என்கிறார் வள்ளுவர்.

"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்"

- உடலுக்கு மருந்தே வேண்டாம். எப்பொழுது? தான் உண்ட உணவு செரித்து விட்டது என்பதை உணர்ந்து பசித்தபின் உண்ணும் பொழுது, அவ்வாறு உண்டால் நோய் வராது. நோய் வராவிட்டால் மருந்து எதற்கு? எனவே நோய் இல்லாமல் நலமாக வாழ வேண்டும் என எண்ணினீர்களானால், உண்ட உணவு செரித்த பின் உண்ணுங்கள் என்கிறார் வள்ளுவர்.

இவ்வாறு நாம் அன்றாட உணவை எவ்வாறு உண்ண வேண்டும். நம் அன்றாட வாழ்க்கைமுறையை எப்படி அமைத்துக் கொண்டு நமது ஆரோக்கிய வாழ்விற்கு தேவையானவற்றை கடைப்பிடித்து நலம் பெற வாழ்வோம். வளம் பெற்று மகிழ்வோம்...

koondhal-11 (1).jpg
இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல் இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது.
முடி என்னமோ எளிதாகக் கொட்டி விடுகிறது. ஆனால் அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது.
வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்து விட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
வெந்தயத்தை பொடி செய்து அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.
சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.
கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால் காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.

TAMIL ‘Entertainment

http://cnntamil.blogspot.com/

Blogroll

facebook

உங்களோடு நான்

Followers

Featured Posts

Popular Posts

Recent Posts