Thursday, August 1, 2013

-______0____6298முன்பெல்லாம் வயதானவர்களை மட்டுமே பாதித்து வந்த முழங்கால் மூட்டுவலி, இப்போது இளம் வயதினரையும் வாட்டி எடுக்க ஆரம்பித்திருக்கிறது. நடப்பதற்கு சோம்பேறித்தனப் பட்டு சொகுசு கார், இருசக்கர வாகனம் போன்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாதது போன்றவைகள்தான் மூட்டுவலி உண்டாக பிரதான காரணங்கள். மூட்டுவலி ஏற்பட்டால் இயல்பாக நடக்க முடியாது. உட்கார்ந்து எழுவதில் சிரமம் ஏற்படும். தவிர, நாள்பட்ட மூட்டுவலியால் வேறு பல உபாதைகளும் உண்டாகும் ஆபத்து உண்டு. இவற்றை எளிதில் தவிர்க்க முடியும். அதற்கென நவீன சிகிச்சைகளும் வந்துவிட்டன!

முழங்கால் மூட்டுவலி இணைப்புகளில் திடீரென்று வீக்கம் அல்லது அழற்சி உண்டாகும். ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ், ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் என்று இரண்டு வகை உண்டு. இவை இரண்டும் பெண்களை எளிதில் தாக்கும் நோய்கள் என்பது அதிரவைக்கும் உண்மை.

மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்னை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் மூட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.

மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்:

1) மூட்டழற்சி(osteo arthritis): 

இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு,
தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.

முழங்காலில் உள்ள இணைப்பிலும், எலும்புகளுக்கிடையிலும் ஒருவித ஜவ்வு இருக்கும்.c5dafacf-616a-4309-bf8b-6c5ebe0889e4_S_secvpf இதற்கு கார்டிலேஜ் என்று பெயர். இந்த ஜவ்வு தான் முழங்கால் மூட்டு தேய்ந்து போகாமல் பாதுகாக்கிறது. முழங்கால் மூட்டும், எலும்பும் ஒன்றோடொன்று ஊராய்ந்து போகாமல், எளிதில் அசைவதற்கு ஜவ்வு அவசியம். ஒருவேளை இந்த ஜவ்வு தேய்ந்து போகும் போதுதான் வலி உண்டாகிறது.

எங்காவது விழுந்து அடிபட்டு நீண்ட நாட்கள் படுக்கை வாசம் செய்பவர்களால் எழுந்து நடக்க முடியாது. இதனால் மூட்டுகளில் அசைவு குறைந்து போகும். அப்போதும் மூட்டுவலி வரும். உடல் எடை கூடுவதாலும், முறையற்ற உணவுப் பழக்கத்தாலும் கூட முழங்கால் மூட்டுகளில் வலி வருவது தவிர்க்க முடியாது.

பெண்கள் பேறு காலத்திற்குப் பின்னர் உடலை கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். இதனால் அவர்களது உடல் எடை கூடும். அதனால் முழங்கால் மூட்டுகளில் வலி வரும். வலி விடாது! படுக்கையிலிருந்து எழுந்திருக்கும் போதும், வலி மெல்ல மெல்ல இடுப்புக்கும் பரவும். சில நேரங்களில் தசைப்பிடிப்பும் ஏற்படும்.

2) முடக்குவாதம்(rheumatoid arthritis): 

pain_6இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள்,மணிக்கட்டு,கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.

ஒவ்வொருவருக்கும் உடலில் குறிப்பிட்ட அளவு நோயெதிர்ப்புச் சக்தி செல்கள் இருக்கும். இந்தச் செல்களில் பாதிப்பு ஏற்படும்போது முழங்கால் மற்றும் கால்களின் இணைப்புகளில் வீக்கமும் அழற்சியும் உண்டாகும். இதுவே ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்(Rheumatoid Arthritis). குடும்பத்தில் முன்னோர்கள் யாரேனும் இருந்தால், பரம்பரையில் மற்றவர்களுக்கு வரும். இந்தப் பாதிப்பு காரணமாக கைவிரல்களில் பிரச்னை உண்டாகும்.

குறிப்பாக, காலை நேரங்களில் கைவிரல்கள் மற்றும் முழங்கால் மூட்டுகளில் இறுக்கிப் பிடித்த மாதிரி உணர்வு வரும், வீக்கம் உண்டாகும், இதனால் வலி ஏற்படும். குளிர்காலங்கள், மழை பெய்யும் காலங்களில் வலி அதிகரிக்கும். கைவிரல்களை நீட்டவோ, மடக்கவோ முடியாது. உடலில் உள்ள மற்ற இணைப்புத் திசுக்கள் பாதிக்கப்படும். நுரையீரல், இருதயம், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் சூழலும் உண்டு.

அறிகுறிகள்:

மூட்டழற்சி: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும். முடக்குவாதம்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.

வலிக்கான காரணம்:

tamil_anatomy_of_knee_jointமுக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம். முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரணமாகும். பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.

சிகிச்சைகள்:

மூட்டுவலியைக் கட்டுப்படுத்த மட்டுமே முடியும். நிரந்தரமாகக் குணமாக்க முடியும் என்றுknee_joint_pain சொல்வதற்கில்லை. ஆதலால் வலி தீவிரமடையாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸில் வலிதான் பிரச்னையே. ஆதலால் வலி நிவாரண மருந்துகள் சிபாரிசு செய்யப்படும். அதனால் வலிதானே என்று அலட்சியப்படுத்தக் கூடாது. அப்படிக் கண்டுகொள்ளாமல் விட்டால், போகப் போக கை, கால்களை அசைக்க முடியாத நிலை ஏற்படலாம். ஒரு கட்டத்தில் அவற்றின் வடிவம் மாறிப் போய்விடும் ஆபத்து உண்டு.

மூட்டுவலி, வயதானவர்களுக்கு மட்டும் தான் என்றில்லை. எந்த வயதினருக்கும் வரலாம். வயது ஏறஏற வலி அதிகரிக்குமே தவிர குறையாது. ஆதலால் ஆரம்பத்திலேயே கவனிப்பது நல்லது.

முழங்கால் மூட்டுவலி மெனோபாஸ் வயதிலிருக்கும் பெண்களையே அதிகம் பாதிக்கிறது என்ற கருத்து உண்டு. ஆனால், இது தவறு. மாறாக இருபது, முப்பது வயதுடைய பெண்களை பாதிப்பதோடு, மெனோபாஸ் நெருங்கும்போது வலி அதிகரிக்கிறது என்பதே உண்மை.

முழங்கால் மூட்டுவலியின்போது, இணைப்பில் ஊசியின் மூலம் மருந்து கொடுக்கப்படுவதும் உண்டு. பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஊசி போடப்படும்.

மருந்துகளில் குணமாகாதபட்சத்தில் அறுவை சிகிச்சையே நல்லது. முதலில் ஆஸ்ரயோட்டமி செய்து கொள்ளலாம். பின்னர் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரலாம்.

ஆனால், ரூமட்டாய்டு ஆர்த்ரைட்ஸதிக்கு மருந்துகள் மட்டுமே போதுமானது. தேவையேற்பட்டால், பிசியோதெரபி செய்து பிரச்னையைக் குறைக்கவும்.

தவிர்ப்பது எப்படி?

walking-the-dog* உடல் எடையைக் குறைப்பது, உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்வது.

* நடப்பது, நீச்சலடிப்பது, சிறுசிறு வேலைகள் செய்வது.

* வாரம் ஐந்து நாட்கள் மிதமான நடைப்பயிற்சி நல்லது.

* சமச்சீர் உணவு, பால், தயிர் அவசியம்.

* கொழுப்புச் சத்துள்ள உணவு வேண்டாம்.

* நார்ச்சத்து உணவுகள் நல்லது.

உணவுப்பழக்கம்:

* வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும். காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும்.  கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.

* கால்சியம் அதிகம் உள்ள பால்,பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்

தவிர்க்கவேண்டியவை: காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்.

0 comments:

Post a Comment

TAMIL ‘Entertainment

http://cnntamil.blogspot.com/

Blogroll

facebook

உங்களோடு நான்

Followers

Featured Posts

Popular Posts

Recent Posts