Monday, January 5, 2015

ஜிம்மில் 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்து விட்டு வருவதை விட வேக நடை, பல அற்புதங்களை நம் உடலில் நிகழ்த்தும். சாதாரணமாக நடப்பதை விடச் சுறுசுறுப்பான வேக நடை (Brisk walk) நற்பலனை அள்ளி தரும்.

பின் இடுப்பு, தொடைகளை வெகு சீக்கிரம் குறைத்து அழகான வடிவத்தைப் பெற சிறந்த பயிற்சி வேக நடை. சுவாசப் பிரச்னை, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற தொல்லைகள் இருப்போர் வேக நடை நடக்கும்போது உடலில் ஆக்சிஜனின் ஒட்டம் சீராகும்.

ஃப்ரெஷ்ஷான காற்றைச் சுவாசித்துக் கொண்டே நடக்கையில் நுரையீரல் நன்றாகச் செயல்படத் தொடங்கும். ஒட்டம், மெது ஒட்டம் இது இரண்டிலும் எரிக்கப்படும் கலோரிகளும் வேக நடையினால் எரிக்கப்படும் கலோரிகளும் சமம்தான்.

'ஷூ' போட்டு நடப்பதுதான் சரியான முறை. வேகமாக நடக்கும் போது செளகர்யமாக இருக்க ஷூ அணிவதே சரி. குடிப்பழக்கம், புகைப்பழக்கம் இருப்பவர்கள், வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள், உடலுழைப்பு இல்லாதவர்கள் வேக நடை நடந்தால் இந்தப் பிரச்னைகளின் தாக்கம் குறையும். தினமும் அரை மணி நேரம் நடக்கலாம்.
30-40 வயதுள்ளவர்கள் மெதுவாக நடக்கத் தொடங்கிக் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். 50வயதுக்கு மேல் உள்ளவர்கள் அரை மணி வரை மட்டுமே நடக்க வேண்டும். அதற்கு மேல் நடக்கக் கூடாது. வேண்டுமெனில் இடையிடையே ஜாக்கிங் செய்யலாம்.
ஸ்ட்ரஸ் பஸ்டர் ஸ்விம்மிங்! 

*உடல் முழுவதற்குமான உன்னதப் பயிற்சி நீச்சல். சைக்கிளிங், ரன்னிங்கை விட நீந்துவதால் அதிகக் கலோரிகள் எரிக்கப்படுகின்றன. உடல் பருமனான குழந்தைகளுக்குச் சிறந்த பயிற்சி! ஒரு மணி நேர பயிற்சியில் 500-650 கலோரிகள் வரை எரிக்கமுடியும்.

* மூச்சை இழுத்து விடுவதால் நுரையீரலுக்குச் சிறந்த பயிற்சியாக இருக்கிறது.

* அதிக டென்ஷன் இருந்தாலும், நீரில் நீந்தும்போது, சில்லென்ற உணர்வும், உடல் அசைவுகளும் ஸ்ட்ரெஸ்ஸையும் பஸ்பமாக்கிவிடும்.

* ஒவ்வொரு இதயத் துடிப்பிலும் ரத்தம் பம்ப் ஆவதால் இதயம் வலிமை பெறும்.

* நீந்துதல் பயிற்சியால் நோய் எதிர்பாற்றல் அதிகரிக்கும்.

* சிறு வயதிலேயே நீச்சல் பழகுவதால், வயதான காலத்தில் வரும் மூட்டுத் தொடர்பான பிரச்னைகளை வரவிடாது.

* தசைகள் நன்கு வளைந்து கொடுக்கும். தசைப் பிடிப்புகள், சுளுக்கு போன்ற பிரச்னைகள் வராது.

* உடலில் உள்ள வெப்பம் குறைந்து சமச்சீரான நிலையைப் பெறும்.

* நீச்சலை செய்வோருக்குப் பக்கவாதம் பக்கம் வராது.

* டைப் 2 சர்க்கரை நோய், இதய நோய், பக்க வாதம் போன்ற நோய்கள் வராமல் காக்கும்.
உடல் உறுதிதன்மை பெறும்.

* மனஅழுத்தம், டென்ஷன், பதற்றம் போன்ற மனம் சார்ந்த தொல்லைகள் தீரும்.

0 comments:

Post a Comment

Blog Archive

TAMIL ‘Entertainment

http://cnntamil.blogspot.com/

Blogroll

Blog Archive

facebook

உங்களோடு நான்

Followers

Featured Posts

Popular Posts

Recent Posts