
Friday, June 3, 2016
4:09 AM
cnntamil
No comments

3:58 AM
cnntamil
No comments
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை என்று சொல்வார்கள் ! இஞ்சி
காய்ந்தால் சுக்கு ஆகும். இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது.
இதன் பயன்களைப் பற்றி கீழே காண்போம்.
சுக்கு, மிளகு, திப்பிலி
என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி
என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடுயதாக இருக்கிறது
இஞ்சி மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது.
ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது;
கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.
மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.
மகளீரின் கருப்பை வலிக்கும், மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.
தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது
நல்ல மருந்தாகும். இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை
வெளிக்கொணர பேருதவி புரிகிறது.
உடலின் ஜீரண உறுப்புகள்,
சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம்
சுத்தப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும்
மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக
அளவில் சேர்த்து சமைப்பார்கள். இஞ்சியின் மருத்துவக் குணங்களில்
முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும்.
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
இஞ்சியை நன்றாக சுட்டு, அதை நசுக்கி உடம்பில் தேய்க்க பித்த, கப நோய்கள்
தீரும்.
இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு
நீங்கி பலம் ஏற்படும். ஆக மூன்று தோஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு
உண்டு. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த
தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்.
இஞ்சி சாறோடு, தேன் கலந்து
சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர்
குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும்.
இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
இதய நோயாளிகளுக்காக இந்திய மருத்துவக் கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொருநாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக் கொள்வது, இதய
நோயாளிகளுக்கு மாரடைப்பை வராமல் காக்கும் என்கிறது அந்தச் செய்தி.
பொதுவாக நாம் அரிசியையே பிரதான உணவாகத் தினமும் உண்டு வருகிறோம். இப்படிப்
பல ஆண்டு காலம் அரிசியை தினசரி உணவாகக் கொள்பவர்களுக்கு, 'பைப்ரினோலிடிக்'
செயற்பாடு குன்றி, ரத்தக் குழாய் அடைப்பைக் கரைக்கும் நடவடிக்கையில்
சுணக்கம் ஏற்படுவதாகவும், இதனை இஞ்சி சரி செய்வதாகவும் இந்த ஆய்வுச் செய்தி
தெரிவிக்கிறது.
இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பு உண்டாகாமல் தடுத்தும், மேலும் உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இஞ்சியையும், சுக்கையும் உபயோகிக்கும் போது, அதன் தோலை நீக்குவது மிக
முக்கியமானது. இல்லை எனில் மாறாக வயற்றுக் கடுப்பு முதலியவை ஏற்படும்.
இஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும் அதன்
மேல் தோல் நஞ்சாகும். அதே போல் சுக்கை சுத்தம் செய்யும்போது அதன் மேல்
சுண்ணாம்பை தடவி காயவைத்து பின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை
நன்கு சீவி எடுக்கவேண்டும்.
இது மிக முக்கியமானது; சுத்தம் செய்யாமல் உபயோகிக்க வேண்டாம்.
இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி
150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து
நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு
சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக
நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும்.
மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப்
பாகுடன் பதப்படுத்தித் தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும்
கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு,
கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன்
தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.
தினம் ஒரு
துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப்
பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும்
கரைக்கும்.
எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு கரண்டி இஞ்சி சாறை
கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூச்சை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட
வேண்டாம்.
இஞ்சி மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது.
ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது;
கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.
மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.
மகளீரின் கருப்பை வலிக்கும், மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.
தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது.
உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள். இஞ்சியின் மருத்துவக் குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும்.
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சியை நன்றாக சுட்டு, அதை நசுக்கி உடம்பில் தேய்க்க பித்த, கப நோய்கள் தீரும்.
இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். ஆக மூன்று தோஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்.
இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும்.
இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
இதய நோயாளிகளுக்காக இந்திய மருத்துவக் கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொருநாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக் கொள்வது, இதய நோயாளிகளுக்கு மாரடைப்பை வராமல் காக்கும் என்கிறது அந்தச் செய்தி.
பொதுவாக நாம் அரிசியையே பிரதான உணவாகத் தினமும் உண்டு வருகிறோம். இப்படிப் பல ஆண்டு காலம் அரிசியை தினசரி உணவாகக் கொள்பவர்களுக்கு, 'பைப்ரினோலிடிக்' செயற்பாடு குன்றி, ரத்தக் குழாய் அடைப்பைக் கரைக்கும் நடவடிக்கையில் சுணக்கம் ஏற்படுவதாகவும், இதனை இஞ்சி சரி செய்வதாகவும் இந்த ஆய்வுச் செய்தி தெரிவிக்கிறது.
இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பு உண்டாகாமல் தடுத்தும், மேலும் உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இஞ்சியையும், சுக்கையும் உபயோகிக்கும் போது, அதன் தோலை நீக்குவது மிக முக்கியமானது. இல்லை எனில் மாறாக வயற்றுக் கடுப்பு முதலியவை ஏற்படும்.
இஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல் தோல் நஞ்சாகும். அதே போல் சுக்கை சுத்தம் செய்யும்போது அதன் மேல் சுண்ணாம்பை தடவி காயவைத்து பின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும்.
இது மிக முக்கியமானது; சுத்தம் செய்யாமல் உபயோகிக்க வேண்டாம்.
இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும்.
மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்தித் தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.
தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும்.
எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு கரண்டி இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூச்சை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.
3:47 AM
cnntamil
No comments
சாப்பாட்டுக்கு முன் ஏதாவது ஒரு கனிவகையை உட்கொள்வது மிகவும் நல்லது’’ என்று வலியுறுத்தும் ‘இயற்கைப் பிரியன்’ ரத்தின சக்திவேல், பெண்களுக்கு அவசியமான, அதிக பலன் தரக்கூடிய சில பழங்களை இங்கு பரிந்துரைக்கிறார்…
சாத்துக்குடி
தலைவலி,
சாதாரண காய்ச்சல், டெங்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய் கண்டவர் களுக்கும்,
நோயில் இருந்து மீண்டவர்களுக்கும் உடனடித் தெம்பு கொடுக்கக்கூடியது. மயங்கி
விழுந்தவர்களுக்கு சாத்துக்குடி சாற்றை கொடுத்தால் சோர்வு தீரும். மூன்று
நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, அனைத்து சளி பிரச்னைகளும் சரியாகும்.
ஆப்பிள்
சீஸனில்
கிடைக்கும் சிம்லா ஆப்பிள்களைச் சாப்பிடுவது நல்லது. ஸ்டிக்கர்
ஒட்டப்பட்டு, மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்களான வெளிநாட்டு ஆப்பிள் களைத்
தவிர்க்கவும். `விட்டமின் பி காம்ப்ளெக்ஸ்’ நிறைந்தது. பசியாற்றும் கனி.
மலச்சிக்கல் போக்கும். வீட்டு வேலைகளில் களைத்திருக்கும்போது ஒரு பழம்
உண்டால், உடலுக்குப் புத்துணர்ச்சியும், உடனடித் தெம்பும் கொடுக்கும்.
சப்போட்டா
மாதுளம்பழம்
கிர்ணிப்பழம் பசியாற்றும் பழம். மலச்சிக்கலை விலக்கும். உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கக்கூடியது. பெண் களுக்கு அடிவயிற்று சூடு போக்கும். நாள்பட்ட மூட்டுவலியைக் குறைக்கும்.
ஆரஞ்சு
இனிப்பான
மற்றும் சத்தான கனி. சாத்துக்குடியின் பலன்களைக் கொடுக்கும்.
மலச்சிக்கலைப் போக்கும். பெண்களின் ரத்தச்சோகை பிரச்னைக்கு மருந்தாக
அமையும்.
‘‘சாப்பாட்டுக்கு
முன் ஏதாவது ஒரு கனிவகையை உட்கொள்வது மிகவும் நல்லது’’ என்று
வலியுறுத்தும் ‘இயற்கைப் பிரியன்’ ரத்தின சக்திவேல், பெண்களுக்கு
அவசியமான, அதிக பலன் தரக்கூடிய சில பழங்களை இங்கு பரிந்துரைக்கிறார்…வெள்ளரிப்பழம்
கோடைக்காலத்தில்
கிடைக்கக் கூடிய பழம். கர்ப்பப்பை பிரச்னை, அடிவயிற்றில் ஏற்படும் சூடு,
சீரற்ற மாதவிடாயை சரிசெய்து, தொப்பையைக் குறைக்கும். மலச்சிக்கல் நீக்கும்.
பிறப்புறுப்பில் ஏற்படும் எரிச்சலைப் போக்கும்.
திராட்சை
கண்
தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்க வல்லது. கண்களுக்குப் பாதுகாவலன்.
பெண்களின் ரத்தச்சோகையை சீர் செய்வதோடு மலச்சிக்கலைத் தீர்க்கும்.
தர்பூசணி
வெயில்
காலத்துக்கு ஏற்ற பழம். முகப்பரு நீக்கி முகப் பொலிவு தரும். உடலைக்
கட்டுக் கோப்பாக வைக்கும். இதிலுள்ள வெள்ளைப் பகுதியை நீரிழிவு மற்றும்
சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, கைமேல் பலன்
கிடைக்கும். சிறுநீரகப் பிணி களுக்கு சிறந்த மருந்து.
இனி… தினம் ஒரு பழம்!
3:28 AM
cnntamil
No comments
தழும்புகள்
வெட்டுக்காயம், தீக்காயம் போன்றவை ஏற்பட்டு நீண்ட நாட்களாகியும் பலருக்கு தழும்பு மறையாமல் இருக்கும். அதைப் போக்குவதற்கான ஆலோசனைகளைச் சொல்கிறார், திருச்செங்கோடு, கொங்கு மருத்துவமனையின் சரும சிறப்பு மருத்துவர் இரா. மனோன்மணி.
‘‘காயம்பட்ட இடத்தில் ஏற்கெனவே இருந்த சருமம் சேதமாகியிருக்க, புதிதாக செல்கள் வளரும்போது, அந்த இடத்தில் புரோட்டீன் அமைப்பு மாறுபடுவ தால், தழும்பாகத் தனித்துத் தெரிகிறது. அதை இயற்கையான பொருட்கள்கொண்டு சரிசெய்யும் வழிகள் பார்ப்போம்
.
முகத்தில் உள்ள இறந்த செல்களை, தக்காளிச் சாறு சிறப்பாக நீக்கவல்லது. அதிகளவு விட்டமின்கள் உள்ள இந்த சாற்றை, தழும்பு உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்துவர, நல்ல பலன் கிடைக்கும்.
கற்றாழை ஜெல்லை தொடர்ந்து தழும்பில் தடவிவர, தழும்பு மறைவதோடு முகம் பளபளக்கும்.
தீக்காயங்களால்
ஏற்படும் தழும்புகள் நீக்க, சிட்ரஸ் பழங்கள் நல்ல சாய்ஸ். எலுமிச்சைச்
சாற்றை தழும்பு உள்ள இடத்தில் தடவி இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்துவர,
இதில் இயற்கையாக உள்ள அமிலத்தன்மை தழும்பை மறையச் செய்வதோடு தோலை
மிருதுவாகவும், பளபளப்பாகவும் ஆக்கும்.
பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், தழும்பு நீக்க உதவும். ஒரு நாளைக்கு இருமுறை என மசாஜ் செய்துவர, தழும்புகள் மங்கிவிடும்.
பாதாமை பால் அல்லது நீரில் 12 மணிநேரம் ஊறவைத்து அரைத்து, அதன் பேஸ்ட்டை ரோஸ் வாட்டருடன் (பன்னீர்) கலந்து பயன்படுத்தும்போது நல்ல பலன் கிடைக்கும்.
உருளைக்கிழங்கு சாற்றில் உள்ள சல்ஃபர் மற்றும் பொட்டாசியம் தழும்புகளைச் சரிசெய்யும் என்பதால், அதன் சாற்றை தொடர்ந்து அப்ளை செய்யவும்.
நாள்பட்ட, அழுத்தமான தழும்புகளை நீக்க, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அதற்கான பிரத்யேக க்ரீம்கள் மற்றும் ஜெல் வாங்கிப் பயன்படுத்தலாம்…’’
வெட்டுக்காயம், தீக்காயம் போன்றவை ஏற்பட்டு நீண்ட நாட்களாகியும் பலருக்கு தழும்பு மறையாமல் இருக்கும். அதைப் போக்குவதற்கான ஆலோசனைகளைச் சொல்கிறார், திருச்செங்கோடு, கொங்கு மருத்துவமனையின் சரும சிறப்பு மருத்துவர் இரா. மனோன்மணி.
‘‘காயம்பட்ட இடத்தில் ஏற்கெனவே இருந்த சருமம் சேதமாகியிருக்க, புதிதாக செல்கள் வளரும்போது, அந்த இடத்தில் புரோட்டீன் அமைப்பு மாறுபடுவ தால், தழும்பாகத் தனித்துத் தெரிகிறது. அதை இயற்கையான பொருட்கள்கொண்டு சரிசெய்யும் வழிகள் பார்ப்போம்
.
முகத்தில் உள்ள இறந்த செல்களை, தக்காளிச் சாறு சிறப்பாக நீக்கவல்லது. அதிகளவு விட்டமின்கள் உள்ள இந்த சாற்றை, தழும்பு உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்துவர, நல்ல பலன் கிடைக்கும்.
கற்றாழை ஜெல்லை தொடர்ந்து தழும்பில் தடவிவர, தழும்பு மறைவதோடு முகம் பளபளக்கும்.
பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், தழும்பு நீக்க உதவும். ஒரு நாளைக்கு இருமுறை என மசாஜ் செய்துவர, தழும்புகள் மங்கிவிடும்.
பாதாமை பால் அல்லது நீரில் 12 மணிநேரம் ஊறவைத்து அரைத்து, அதன் பேஸ்ட்டை ரோஸ் வாட்டருடன் (பன்னீர்) கலந்து பயன்படுத்தும்போது நல்ல பலன் கிடைக்கும்.
உருளைக்கிழங்கு சாற்றில் உள்ள சல்ஃபர் மற்றும் பொட்டாசியம் தழும்புகளைச் சரிசெய்யும் என்பதால், அதன் சாற்றை தொடர்ந்து அப்ளை செய்யவும்.
நாள்பட்ட, அழுத்தமான தழும்புகளை நீக்க, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அதற்கான பிரத்யேக க்ரீம்கள் மற்றும் ஜெல் வாங்கிப் பயன்படுத்தலாம்…’’
3:25 AM
cnntamil
1 comment
பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான்
அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி
சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.
கீரை வகைகளில் இரும்புச்
சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப்
பார்ப்போம்.முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.
முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன்
சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில்
ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம்
படைத்தது முருங்கைக் கீரை.
சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில்
தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும்.
ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி
சற்று விரிவாக காண்போம்.
இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல
வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு
ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும்.
எனவேதான்,
இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும்.
முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி
சேர்த்தோ சமைப்பது நலம்.
முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து
வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை
உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன்
சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.
மரம் முழுவதும் மருந்தாக இருக்கும் முருங்கையை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள மறவாதீர்கள்.
அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி
சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.
கீரை வகைகளில் இரும்புச்
சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப்
பார்ப்போம்.முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.
முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன்
சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில்
ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம்
படைத்தது முருங்கைக் கீரை.
சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில்
தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும்.
ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி
சற்று விரிவாக காண்போம்.
இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல
வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு
ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும்.
எனவேதான்,
இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும்.
முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி
சேர்த்தோ சமைப்பது நலம்.
முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து
வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை
உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன்
சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.
மரம் முழுவதும் மருந்தாக இருக்கும் முருங்கையை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள மறவாதீர்கள்.
Subscribe to:
Posts (Atom)